ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உடல் நலக்குறைவு : பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பு

245 0

உடல்நலக்குறைவு காரணமாக சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கலந்துகொள்ள முடியவில்லை என அரச வைத்தியர்கள் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பில் நேற்று இரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்த நிலையில், குறித்த கலந்துரையாடல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் உடல்நலம் தேறியவுடன் சைட்டம் கல்லூரி தொடர்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் நவீன் டீ சொய்சா கூறியுள்ளார்.

இதேவேளை, அரச வைத்தியர்கள் அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது சைட்டம் கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.