பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!

236 0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றுமொரு நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதவான், இந்த அழைப்பாணை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.

அரச நிதிகளை பயன்படுத்தி மல்வானை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு தொடர்பிலான வழக்கு குறித்தே எதிர்வரும் மே மாதம் 3ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பசில் ராஜபக்ச உள்ளிட்ட மற்றைய நபருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.