கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 22 வது நாளாகவும் தொடர்கின்றது

247 0
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அதேநேரம் வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எவ்வாறாயினும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அடுத்த மாதத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வைத்து உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.