தாதியர் சங்கத்தின் போராட்டம் தோல்வி – ராஜித தெரிவிப்பு

324 0
அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் நாடு தழுவிய ரீதிய முன்னெடுத்து வரும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் தோல்வி அடைந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை என்பவற்றில் மாத்திரம் இந்த போராட்டம் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய வைத்தியசாலைகள் அனைத்தும் சுமுகமாக இயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேதனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இன்றும் நாளையும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று குறித்த சங்கம் அறிவித்திருந்தது.