சைட்டம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மருத்துவ சபையால் மனு தாக்கல்

238 0
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவை வலுவற்றதாக்குதாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை வைத்தியசபையினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, குறித்த தனியார் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்கள், இலங்கை வைத்தியசபையில் பதிவு பெற சட்டரீதியான உரித்துடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவை வலுவற்றதாக்க கோரி வைத்தியசபையினால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல, மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் தரப்பினர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.