இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.
வகுப்பறைக் கட்டிடத்தின் மீது வீழ்ந்த பலா மரம் மேற்கூரையில் இருந்த ஓடுகளை உடைத்ததால் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தலைகளில் ஓடுகள் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காயமடைந்த எட்டுப் பேரும் முச்சக்கரவண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டு கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

