யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி போராட்டம்

153 0

யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சனிக்கிழமை (01) போராட்டமொன்றில் ஈடுபட்டனர் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது .

குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர் .

போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டனர் .