பிலிப்பைன்சில் திருட்டுகுற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

108 0

பிலிப்பைன்சில் திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மிவ்ராஸ் முனாவர் என்ற 28 வயது இலங்கையரே பிலிப்பைன்சின் குடிவரவு பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பைன்சில் தங்கியிருப்பதற்கான நிபந்தனைகளை மீறியமைக்காகவும் விரும்பத்தாகதமைக்காகவும் மிவ்ராஸ் முனாபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிராந்திய நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து குடிவரவு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள்இவரை கைதுசெய்துள்ளனர்.

பிலிப்பைன்சில் உள்ள நிறுவனமொன்றில் இலங்கை நபர் முறைகேடுகளில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியுள்ள அதிகாரிகள் அவருக்குஎதிராக 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

முனாவர் திருட்டு குற்றச்சாட்டு வழக்குகளையும் குடிவரவுபணியக வழக்குகளையும் எதிர்கொள்வார் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.