மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படாததின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேர இதனை தெரிவித்துள்ளார்.
சைட்டம் பிரச்சினை தொடர்பில் நியமிக்கப்படும் குழுவில் மாணவ அமைப்புக்கள் உள்வாங்கப்படவில்லை.
இந்த நிலையில் சைட்டம் குறித்து மாணவர் அமைப்புக்களால் ஜனாதிபதியிடம் வழங்கிய கடிதமேனும் பரிசீலிக்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சைட்டம் தொடர்பான கலந்துரையாடல்களின்போது மாணவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் கேட்க தயாராக இல்லையாயின் மக்களுடன் வீPதியில் இறங்கி அதனை அரசாங்கத்திற்கு கூற தாம் தயாராக உள்ளதாக லஹிரு வீரசேகர குறிப்பிட்டார்.