எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 24 பேர் பலி

240 0

ஆபிரிக்க நாடான எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் ஏற்பட்ட மண்சரிவில் 24 பேர் பலியாகினர்.

அத்துடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாகவும், இதனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிஸ் அபாபாவின் புறநகர் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பாரிய குப்பைமேடொன்று சரிந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

நிலச்சரிவு இடம்பெற்ற பிரதேசத்தை அண்டிய பகுதியில் சுமார் 30 தற்காலிக வீடுகளில் தங்கியிருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஐம்பது வருடங்களாக தலைநகரின் குப்பைகள் சேகரிக்கும் இடமாக குறித்த புறநகர் பகுதி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.