சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை – மஹிந்த அமரவீர

239 0

சபாநாயகர் கரு ஜயசூரியவை பதவியிலிருந்து நீக்க எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, வேறு ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு வெளியிடப்படும் கருத்துகள் அடிப்படையற்றவை.

சபாநாயகர் சிறந்த ஒரு அரசியல்வாதி.

அவர் அரசியலுக்கு அப்பால் சமநிலையுடன் செயற்படுகின்றார்.

அவரை நீக்க எந்தவொரு தேவையும் இல்லை.

அவரை நீக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.