இலக்கியவாதி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முக தளத்தில் இயங்கியவர் என அறியப்படும் புளோறன்ஸ் ஜோசப் வின்சனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் ஊடகவியலாளர் க.ஹம்சனன் பொது சுடர் ஏற்றியதுடன், தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

