ரயில் முன் பாய்ந்து 27 வயதான இளைஞர் தற்கொலை!

166 0
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் ஹபராதுவை ரயில்  நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.

இந்த இளைஞர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த  ரயில் முன்   பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.