யாழ். குருநகரில் ஹெரோயினுடன் இளைஞன் கைது

171 0

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குருநகர் ஐந்து மாடி வீட்டு தொகுதிக்கு அருகில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது , 07 கிராம் 05 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் இளைஞனையும், மீட்கப்பட்ட போதைப்பொருளையும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.