மால்டா ரெயில் நிலைத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

419 0

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா ரெயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பயணிகள் காத்திருக்கும் அறையில் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என ரெயில்வே போலீஸ் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக நடத்தப்படுவதை போன்றே மால்டா ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் படை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பயணிகள் காத்திருக்கும் அறையில் நான்கு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பின் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் செயல் இழக்கச் செய்யப்பட்டது.
ரெயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தக்க நேரத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளா மாநிலத்தின் ரெயில் நிலையம் ஒன்றில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.