யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டு வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள சத்திர சிகிச்சைகள்

162 0

யாழ்.போதனா வைத்தியசாலையில் விழித்திரை சத்திர சிகிச்சைகள் இன்று முதல்(23.06.2023) ஆரம்பமாகவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“விழித்திரை சத்திர சிகிச்சையானது, சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் கடந்த 2 வருடங்களாக நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது விழித்திரை சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி ஷைலா பரதன், பதில் கடமையேற்றுள்ளார். அவர் தமது சேவையினை மக்களுக்கு வழங்கு முகமாக வாரத்துக்கு ஒருமுறை ஆறு பேர் வீதம் 100 சத்திர சிகிச்சைகளை இன்று முதல் மேற்கொள்ளவுள்ளார்.