அக்கரைப்பற்றில் எரிந்த நிலையில் நபரொருவரின் உடலம் மீட்பு

244 0

அம்பாறை , அக்கரைப்பற்று – கள்ளீகுட்டி பிரதேசத்தில் நெல் வயல் ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் உடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று காவற்துறைக்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எந்த உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடலத்தின் கைகள் கம்பிகளால் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ஆலயாடிவெம்பு பிரதேசத்தை சேர்ந்த சுமார் 23 வயது மதிக்கத்தக்க நபராவார்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.