வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

245 0
நாட்டில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 21 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
3 லட்சத்து 19 ஆயிரத்து 328 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சியான காலநிலை பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவர்களில், மேல் மற்றும் வட மாகாணகத்தைச் சேர்ந்தவர்களே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 4 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் 1 லட்சத்து 21 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.