இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட அதிக நிதி புகைத்தலால் ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை சுகப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் செலவிட வேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்த தெரிவித்தார்.
புகையிலை நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் வருடாந்தம் 100 பில்லியன் ரூபா வரி வருமானத்தை ஈட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுபான பாவனையால் வருடாந்தம் 35,000 பேர் உயிரிழப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியொரு சிகரட்டை விற்பனையை நிறுத்துவது தொடர்பான சட்டதிட்டங்களை தயாரிக்கும் யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாக அவர தெரிவித்தார்.
அந்த யோசனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் சிகரட்டுக்களை பெட்டிகளாக மாத்திரம் விற்பனை செய்வதற்கான சட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்