கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயம்(காணொளி)

349 0

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரதம் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு  நோக்கிச் சென்றுகொண்டிருந்த புகையிரதமும், சிறியரக உழவு இயந்திரமும் விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரத்தின் சாரதி சிறு காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த  சுப்பிரமணியம் – பாலகிருஷ்ணன் வயது – 40, என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறிவியல்நகர் பகுதியில் உள்ள கடவையை உழவு இயந்திரம் கடக்க முயன்றபோது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக தொழிற்படாத காரணத்தால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியிலுள்ள சமிக்கை விளக்கு சரியாக தொழிற்படாத காரணத்தால் இவ்  வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்தாக நேற்றைய விபத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்து இடம்பெற்ற பபகுதிக்குச்சென்ற சிலர் புகையிரத்திற்கு கல்வீச்சு மேற்கொண்டதால் புகையிரதப் பெட்டிகளின் சில கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி, மாங்குளம்  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.