வெள்ளை மாளிகையின் மதில் தாண்டிய ஒருவர் கைது

234 0

வெள்ளை மாளிகையின் மதில் தாண்டிய நுழைந்த ஒருவரை அமெரிக்க ரகசிய காவல்துறை சேவை கைது செய்துள்ளது.

எப்படியிருப்பினும், அவரின் பயண பொதியில் அபாயகரமான பொருள் எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தருணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாளிகையில் தங்கியிருந்தார்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் உள்துறை செயலாளர் ஜோன் கெலிக்கும் அதிகாரிகள் அறிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமாக வெள்ளை மாளிகையினுள் நுழைந்தவர் கலிபோனியாவை சேர்ந்த 26 வயதான ஜொனதன் ட்ரான் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், பராக் ஒபாமா ஆட்சியின் போது கடந்த 2014ஆம் ஆண்டு 40 வயதான ஒமார் கோணசாலீஸ் என்பவர் வெள்ளை மாளிகையின் மதில் தாண்டி கட்டடத்தினுள் நுழைந்த போது அவரை சோதனையிட்ட காவல்துறையினர் கூரிய கத்தி ஒன்றை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.