வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு விரைவில்

237 0

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ் சிங்கள புது வருடத்திற்கு முன்னர் நட்டஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

விவசாய பாதிப்பு தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்டிருந்த சகல சுற்று நிரூபங்களும் ரத்து செய்யப்பட்டு, புதிதாக தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கு அமையவே நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு நட்ட ஈட்டை துரித கதியில் வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.