மின்னல் தாக்கி ஒருவர் பலி

218 0

கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுக்கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதான குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் கந்தளாய் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.