இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் இன்று ஹட்டனில் அடையாள கவன ஈர்ப்பு போராட்டம்

234 0

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் இன்று ஹட்டனில் அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளது.

தமது சங்கத்துடனான கூட்டு ஒப்பந்தம் கடந்த 2016 செப்டம் மாதம் 31ஆம் திகதி காலாவதியாகியுள்ளதாகவும், 40 வீத வேதன அதிகரிப்பை வழங்க கோரி பல சுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சங்கத்தின் பிரதி தலைவர் எஸ்.எஸ்.ஜெயகுமார் தெரிவித்தார்.

எனினும் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் இன்றைய தினம் நுவரெலியா, தலவாக்கலை, ஹட்டன் பகுதி சேவையாளர்களை ஒன்றிணைந்து ஹட்டன் கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி, மத்துகம, அவிஸாவளை, கொழும்பு ஆகிய பகுதிகளிலும் தமது கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், தீர்வு இன்றேல் இந்த மாத இறுதியில் நாடுதழுவிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் சங்கத்தின் பிரதி தலைவர் குறிப்பிட்டார்.