போராட்;டங்களை மட்டுப்படுத்த ஏற்பாடுகள் இல்லை – அரசாங்கம்

256 0

கொழும்பில் இடம்பெறும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை மட்டுப்படுத்த ஏற்பாடுகள் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை தடுக்கும் வகையிலான செயற்பட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் உள்ளனவா என வினவியபோதே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

அரச சேவை தாதியர் சங்கம் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் கொழும்பில் மேற்கொள்ளப்படும் பேரணிகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் காவல்துறைமா அதிபரிடம் வினவியபோதே இவ்வாறான எந்த ஏற்பாடுகளையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.