11 ஆயிரத்து 792 காவல்துறை அதிகாரிகள் ஐந்து மணி நேரம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 567 பேர் உள்ளிட்ட ஆயிரத்து 246 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை குறிப்பிட்டுள்ளது.
குற்றம், போதைபொருள், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களிடம் கைரேகை அடையாளம் பெறப்பட்ட போது, அவர்களில் 110 பேர் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்களில் வான்படை, கடற்படையில் இருந்து தப்பிச் சென்றவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.