கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது

435 0

dad1-450x225சிறீலங்காவில் கசினோ விளையாட்டுக்காக எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பயணமான பிரதமர் ரணில்விக்கிரமசிங்க நாடு திரும்பும் முன்னர் சிங்கப்பூர் ஷங்ரிலால் நட்சத்தி விடுதியில் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டார்.

இச்சந்திப்பில், சிறீலங்காவில் அதிக முதலீடுகள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ள துறைகள் தொடர்பாக ஆராயப்பட்டபோது, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கசினோ விளையாட்டில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போதைய அரசாங்கமும் அனுமதி வழங்குமா என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கை யிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கேள்விக்குப் பதிலளிகையில், புதிதாக எவருக்கும் கசினோ விளையாட்டில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு கசினோ விளையாட்டைப் பயன்படுத்தும் உத்தேசம் தற்போதைய அரசாங்த்துக்கு இல்லை எனத் தெரிவித்தார்.