கைவிட்டுச் செல்லப்பட்ட குழந்தை ஒன்று மீட்பு

264 0

பாணந்துறை நகரில் உள்ள குறுக்கு வீதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் பிறந்த குழந்தையொன்றை கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இன்று பதிவானது.

குறித்த குழந்தையை மீட்டெடுத்த பொது மக்கள் குழந்தையை பாணந்துறை காவல்நிலையத்தில் கையளித்துள்ளனர்.

இதனை அடுத்து குறித்த குழந்தை பாணந்துறை கேதுமதி மகளிர் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தை தற்போது சிறந்த உடல நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.