கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோறாவது நாளாகவும் தொடர்கின்றது.

278 0

முல்லைத்தீவு – கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று பதினோறாவது நாளாகவும் தொடர்கின்றது.

தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியே குறித்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலைகள், கோவில்கள், பொதுநோக்குமண்டபம் மற்றும் தமது பொருளாதார வளங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக குறித்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

போராட்டம் ஆரம்பித்தது முதல் இது வரையில் எந்த விதமான தீர்வும் எட்டப்படாத நிலையில், இருவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தையும் இன்று ஆரம்பித்துள்ளனர்.