பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் பல புதிய சட்டங்கள்

263 0

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் பல புதிய சட்டங்களை கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைகுறித்து பெருமையடைய முடியாது.

வெளிநாட்டு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வெளிநாட்டு வருவாய்கள் போதுமானதாக இல்லை.

எனவே இலங்கைக்கு பாரிய முதலீடுகள் தேவைப்படுகின்றது.

இலங்கையினர் தமது பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர்.

இலங்கையில் முதலீடு உட்பட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன.