14 லட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம்.

281 0

யேமன், தென்சூடான், சோமாலியா மற்றும் நைஜீரிய முதலான நான்கு நாடுகளில் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நேற்று உரையாற்றியபோது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான குழுத் தலைவர் ஸ்டீபன் ஓ ப்ரெய்ன் இதனைத் தெரிவித்துள்ளார்.

யேமனில் 14.1 மில்லியன் பேரும், தென் சூடானில் 4.9 மில்லியன் பேரும், சேமாலியாவில் 2.9 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 1.8 மில்லியன் பேரும் பசி, பட்டினியை எதிர்நொக்கி உள்ளனர்.

இந்த நாடுகளில் தொடரும் பசி, பட்டினி பாதிப்பை தவிர்ப்பதற்கு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 14 லட்சம் சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என சர்வதேச குழந்தைகள் அமைப்பான யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.