அம்பாறை, ஒலுவில் கடல் பகுதியில் மரத்தினாலான மாதிரி தேவாலயம்(காணொளி)

399 0

அம்பாறை, ஒலுவில் கடல் பகுதியில் மரத்தினாலான மாதிரி தேவாலயமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை, ஒலுவில் கடல் பிராந்தியத்தில் 20 அடி சதுரப் பரப்பளவு கொண்ட மரத்திலான மாதிரி தேவாலயமொன்று மிதந்து வந்த நிலையில், கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மரத்திலான மாதிரி தேவாலயம், திருக்கோவில் பிரதேசத்திலிருந்து கடலில் மிதந்து வந்ததாகக் கிடைத்த தகவலையடுத்து கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவை ஒலுவில் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், மரத்தினாலான தேவாலயம் போன்று வடிவமைக்கப்பட்டு, அதனுள் பூசை வழிபாடுகள் இடம்பெற்ற தடையங்களும் மற்றும் பொருட்களும் காணப்படுகின்றன.

மரத்தினால் செய்யப்பட்ட இத் தேவாலயத்தைச் சுற்றி தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் காணப்படுகின்றன.

இவை ஏதாவது பலி கொடுப்பதற்காக அமைக்கப்பட்டதொன்றாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.