குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம்

128 0

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர் ரெமா சந்திரமோகன் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை அனைவரும் தவிர்க்க வேண்டும். இந்த மருத்துவமனையை பிளாஸ்டிக் பைகள் இல்லாத மருத்துவமனையாக மாற்றுவதற்காக, தமிழக சுற்றுச்சூழல் துறை உதவியுடன் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.