போதகர் ஜெரோமின் மனைவி, பிள்ளைகள் நாடு திரும்பினர்

71 0

பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவியும் பிள்ளைகளும் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

சிங்கப்பூரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (02) இரவு சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் விமானம் SQ-468 மூலம் போதகரின் மனைவியும் பிள்ளைகளும் இலங்கை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

போதகர் ஜெரோமின் மனைவி மற்றும் பிள்ளைகள் உட்பட 12 பேர் கொண்ட குழு முன்னதாக சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியாகி இருந்தது. ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது மனைவியும் ஏனைவர்களும் நாடு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.