ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம்(காணொளி)

245 0

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த விசாரணை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்றது.

அத்துடன் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் அடுத்த மாதமளவில் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிடம் சாட்சியங்களை பதிவுசெய்வதற்கு முன்னர் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் சாட்சியமளித்துள்ளார்.

இதுவே பிணை முறிவிவகாரம் தொடர்பில் அர்ஜூன மகேந்திரன் அளித்த முதலாவது சாட்சியமாகும்.

இந்நிலையில் ஏற்கனவே மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, பொதுக்கடன் நிதியத்தின் பிரதான அத்தியட்சகர்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஆகியோர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை விசாரணை அறிக்கைகளை அடுத்த மாதமளவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க முடியும் என பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.