இலண்டன் வாழ் இலங்கையர்களை அமைச்சர் ரிஷாட் இன்று சந்திக்கின்றார்

325 0

இலண்டனில் வாழும் இலங்கையர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இலண்டன் இலங்கை முஸ்லிம் கலாச்சார மத்திய நிலையத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஹரோவிலுள்ள இலங்கைப்பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பு இலண்டம் நேரப்படி இரவு 7.45 இற்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் அரசியல் சூழ்நிலை, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் அரசியலைமைப்பு, தேர்தல் முறை மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் இந்த சந்திப்பில் எடுத்துரைப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.