பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2023

572 0

தமிழ் கல்விக் கழகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயம், கல்விக் கழகத்தின் கல்வி கலை விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுனர்ப் போட்டிகளை 27.05.2023 அன்று சிறப்பாக நடாத்தியது.

யேர்மன்தேசியக்கொடி, தமிழீழதேசியக்கொடி மற்றும் தமிழாலயக் கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து, முள்ளிவாய்காலிலே இனப்படுகொலைக்குள்ளான மக்களையும், மாவீரர்களையும் நினைவுகூர்ந்து நினைவுச்சுடரேற்றி மலர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து, போட்டியாளர்களால் வெற்றிச்சுடர் மைதானத்தினுள்ளே ஏந்திவரப்பட்டு, ஏற்றிவைத்து உறுதியேற்புடன் போட்டிகள் தொடங்கின. அயற் தமிழாலயங்களும் இணைய 115க்கு மேற்பட்ட போட்டியாளர்களின் பங்குபற்றுதலோடு சிறப்பாக நடைபெற்றது.

கல்வி கலையோடு, மனிதர்களின் உடல் உள ஊக்கத்தை பேணுவதில் விளையாட்டிற்கும் கணிசமான பங்குண்டு என்பதை தமிழினத்திடையே ஏற்படுத்திட இதுபோன்ற விளையாட்டுப் போட்டி துணைபுரியும். தமிழாலயங்களின் பெற்றோர்கள். மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நிறைவான பங்கேற்பும் போட்டிக்கு வளம் சேர்த்தன. நிறைவாகத் தேசியக் கொடிகளின் கையேற்பையடுத்து, நாளை மலரும் தமிழீழம் என்ற நம்பிக்கையின் கூட்டுணர்வோடு பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுனர் போட்டி 2023 நிறைவுற்றது.