இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது எரிபொருள் கோட்டா

105 0
எரிபொருள் கோட்டா இன்று செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

அதனடிப்படையில் பதிவு பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீற்றரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஸ் மற்றும் லொறிகளுக்கு வாரத்திற்கு 125 லீற்றர் எரிபொருளும் கோட்டா நடைமுறையின் கீழ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.