இலங்கை வந்த விமானத்தில் பயணி உயிரிழப்பு!

59 0

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல்-605 என்ற விமானத்திலேயே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற முதியவரே விமானத்தில் உயிரிழந்துள்ளார்.