இலஞ்சம் பெற்ற சுகாதார சேவை உதவியாளர் விளக்கமறியலில்

236 0

5,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொது சுகாதார சேவை உதவியாளர் ஒருவர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஒருவருக்கு சொந்தமான கட்டடம் ஒன்றை சோதனை செய்த பின்னர் அங்கு டெங்கு இருப்பதாக தெரிவித்து சட்ட நடவடிக்கையிலிருந்து தவிர்ந்துகொள்ள 5,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ள சுகாதார சேவை உதவியாளர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.