வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

241 0

வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால் தேர்வானவர்களிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கோரப்பட்ட விண்ணப்பங்களில் போட்டிப் பரீட்சையில் சித்தி எய்தியவர்ஙளிற்கு இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் 559 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பட்டதாரிகளிற்கு கடந்த மாதம் இறுதியில் வழங்கப்படவிருந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் எதிர்வரும் 13ம்திகதி வழங்கப்படவுள்ளது. இவ்வாறு நியமனம்வழங்கத் தேர்வான ஆசிரியர்களிற்கு தனித்தனியான அறிவித்தல்கள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேற்படி நியமனங்கள் 13ம் திகதி யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலமைநில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இதன்போது பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 72 பட்டதாரிகள் இந் நியமனத்தில் உள்வாங்கப்படாதபோதும் அவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையே மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கலவி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.-