இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

243 0

பியகம பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் குறித்த நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்ட விரோதமாக சேமித்து வைக்கப்பட்ட 6 ஆயிரத்து 730 லீட்டர் டீசல் மற்றும் 175 லீற்றர் பெற்றோல் ஆகியன காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.