நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது!

256 0

யாழ்ப்பாணம்-தையிட்டியில் தனியார் காணியொன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுவரும் பெளத்தவிகாரைக் அமைத்தலுக்கெதிராக போராட்டத்தினை நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ. கஜேந்திரன் அராஜகமான முறையில் கைது செய்து சிறிலங்கா காவல்துறையால் தூக்கிச்செல்லப்பட்டார்.அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உணர்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி விரட்டியதோடு, அவர்களில் 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இதனைக் கண்டித்து, அனைத்துல அரசியல் இராசதந்திரக் கட்டமைப்பு-தமிழீழம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதோடு, அவ்வறிக்கையானது அனைத்துநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்படுள்ளது.