பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

231 0

பிரான்சு கிளிச்சி நகரில் நேற்று 18.05.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மூதூரில் 2006 படுகொலை செய்யப்பட்ட பிரான்சு பட்டினிக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் நினைவாக புதிய இடத்துக்கு இடம்மாற்றப்பட்ட நினைவுத்தூபிக்கு முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – கிளிச்சி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடர் மற்றும் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.நினைவுத் தூபி முன்பாக பொதுச்சுடரினை திரு .பரராஜசிங்கம் (உப தலைவர் தமிழ்ச்சங்கம் கிளிச்சி) அவர்கள் ஏற்றிவைக்க,ஈகைச்சுடரினை 1991 அன்று ஆனையிறவுச் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர் வினோத் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க, 1992 அன்று மணலாறுப் பகுதியில் வீரச்சாவடைந்த கப்டன் மணாளன் அவர்களின் சகோதரி மலர்வணக்கம் செய்தார். கிளிச்சி நகரபிதா, துணை நகரபிதா, முன்னாள் நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் இவர்களோடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை உறுப்பினர்கள், சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிளிச்சி வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.

சிறப்புரைகள் மற்றும் நினைவுரைகளை

M.Richard, conseiller municipale au devoir de mémoire
Mme.Alice Le Moal adjointe au maire et conseillere départementale
Monsieur Gilles CATOIRE
Ancienne Maire de CLICHY
Mme Michelle CAPDET
Membre de L’OEIE
M.Lion DIAP
Membre de L’OEIE

மக்கள் பேரவைப் பொறுப்பாளர். திரு.திருச்சோதி அவர்கள், கிளிச்சி தமிழ்ச்சோலை ஆசிரியைதிருமதி நர்மதா அமுதன் அவர்கள்.
மற்றும் தமிழ்ச்சோலை மாணவ மாணவிகள் ஆற்றியிருந்தனர்.

இவர்களோடு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை உறுப்பினர்கள், சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிளிச்சி வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர். கலந்துகொண்ட கிளிச்சி நகரபிதா மற்றும் முன்னாள் நகர பிதா ஆகியோர் கருத்துரைக்கையில், தற்போது குறித்த நினைவுத்தூபி இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இடத்தில் இந்நிகழ்வு நடைபெறுகின்றமை குறித்துத் தெரிவித்த அவர்கள் தமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் எனத் தெரிவித்தனர்.

2013 ஆம்ஆண்டு குறித்த தூபி ஆரம்பிக்கப்பட்ட போது, சிறிலங்கா அரசினால் இதற்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து முன்னாள் நகரபிதா நினைவு படுத்தியிருந்தார்.
நன்றியுரையினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு. க.சச்சிதானந்தம் (சச்சி) அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், தமது சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கும் மாநகர முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியுரைத்தார்.

முள்ளிிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் வழங்கப்பட்டது. நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)