இலங்கை அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023 இன்று பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு நிகழ்வும் பேரணியும் அத்துடன் கண்காட்சியும் இடம்பெற்றது. உணர்வெழுச்சியுடன் மக்கள் பெரும் அதிர்வலையாக கோசம் எழுப்பியபடி பேரணி அன்றவெப்பன் நகரைச் சுற்றி வந்து opera plein எனுமிடத்தில் நிகழ்விற்காக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முடிவடைந்து வணக்க நிகழ்வு இடம் பெற்றது . 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மக்களுக்காக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி பெல்சிய நாட்டு மொழியிலும் தமிழ் மொழியிலும் படுகொலை பற்றி நினைவுரையாற்றப்பட்டது. அத்துடன் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இன அழிப்பின் சிறு நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்காலில் மக்களின் பசியாற்றிய கஞ்சி அதே உணர்வுடன் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு இறுதியாக எமது தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
- Home
- முள்ளிவாய்க்கால்
- தமிழின அழிப்பு நாள் மே -18-பெல்யியம்.
மாவீரர் துயிலுமில்லம் யேர்மனி

ஆசிரியர் தலையங்கம்
-
எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயம்!
October 10, 2023 -
நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது!
September 30, 2023 -
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2023 சுவிஸ்
November 10, 2023