தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை – பைசர் முஸ்தபா

226 0

உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசுக்கு எந்த தேவையுமில்லை என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபா கடந்த சனிக்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

எல்லை நிர்ணய மேன்முறையீடு நிறைவடைந்துள்ளதால் விரைவில் தேர்தலை நடத்தமுடியும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிடப்படுவதாகவும், ஜனாதிபதி எந்த கட்சிக்கும் அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டார் என அமைச்சர் பைசர் முஸ்தபா இதன்போது மேலும் தெரிவித்தார்