மஹிந்தவுக்கு நிதி அமைச்சர் சவால்

231 0

சர்ச்சைக்குரிய மத்தியவங்கி பிணை முறி தொடர்பான வர்த்தமானியில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் முடியுமானால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போதே நிதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது ஜனவரி 08 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியின் பின்னர் வெளிவந்த வர்த்தமானியில் அவரது பெயர் எவ்வாறு வந்தது என எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது