ஹபரணை பூங்காவில் வேட்டை இறைச்சியுடன் 2 பேர் கைது

226 0

ஹபரணை பூங்காவில் வேட்டை இறைச்சியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர்களை சுற்றிவளைத்த போது 4 பேர் இருந்துள்ளதுடன், 2 பேர் தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தப்பிச் சென்றவர்கள் குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் இன்று கெகிராவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.