வட மாகாணத்தில் 400 பேருக்கு எச்.வன்.என்.வன் நோய் தொற்று

236 0
வட மாகாணத்தில் இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 400 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மருத்துவமனையில் மாத்திரம் 244 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 80 பேர் கர்ப்பிணி தாய்மார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நோய் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுபவர்களின் இரத்த மாதிரி, கொழும்பு மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்பபட்டுள்ளது.
அதில் 37 பேருக்கு இன்ப்ளுவென்சா எச்.வன்.என்.வன் நோய் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.