மாற்றத்தை ஏற்கத் துணிவோம் – கவனயீர்ப்புப் போராட்டம்!

507 0

மகளிர் தினத்தை முன்னிட்டு கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்தை ஏற்க துணிவோம்” எனினும் தொனிப்பொருளில் கவனயீர்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் காலை 9.30 மணியளவில்யாழ்ப்பாணம் பிரதான வீதி பஸ்தியன் சந்தியில் இடம்பெற்றது.

“பெண்மையின் மென்மை பலவீனம் அல்ல அது ஆண்மையை வெல்லும் ஆயுதம்”, “பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நற்சமூகத்தை உருவாக்குவோம்”, ” பெண்கள் உரிமையை பாதுகாத்து மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்போம்”, “பெண்களுக்காக போராடுவது மனித நேயத்திற்காக போராடுவதாகும்”, “தற்துணிவை ஏற்படுத்தி பெண்கள் தலைமைத்துவத்தை ஏற்க துணிவோம்” எனும் கோசங்களை முன்வைத்து தமது போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகளீர் அமைப்பினர், மதத் தலைவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

image-0-02-06-daf2cae7ddee552bbca86c11f62276ab43d333dba7b21a39ed159d59b4e5a658-vimage-0-02-06-da2fde5a0613aeca4ed03bd9066569935502744395b734c7e9bde924abf62b8e-vimage-0-02-06-652832ab650a3dd930eced5fd2d49271ff60d2a8bb846051eb3f8414e4d2dc2f-vimage-0-02-06-dee03e24942b55bc25a0e2027c63aa4ef7fa0275845e0b130cf08186b02ccc27-vimage-0-02-06-92e4963bf8db200af803431f1b9327021846313c8b2f80cd580b9ef791c34d59-vimage-0-02-06-4ade5785bf7dace6e7685f0498ccf640b04550651f8ba6703a7f208b465bb079-vimage-0-02-06-0323e862001c850666245fce3e45e556ea07640694a12bfd88e331f868834e6d-v